உள்நாட்டு
People
[news][column2]
கடந்து வந்த பாதைகள்
2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கிய போது செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. வில் உரையாற்றினார். அந்த உரை 4 தூண்களின் அடிப்படையிலானவை. முதலாவது தூண் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பது. இரண்டாவது நட்டயீடுகள், கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்பது. நான்காவது இனி நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது. இந்த நான்கும் நடைபெற வேண்டும். நான்கில் ஒன்று மற்றதுக்கு மாற்றீடாக அமைய முடியாது. உண்மை கண்டறியப்பட வேண்டியது முக்கியமான விடயம். இதனாலேயே நீதி கடத்தப்படக் கூடாது என்று கூற முடியாது. இனி நிகழாமைக்கான உத்தரவாதம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவதற்கான பொறிமுறை கண்டறியப்பட்டால் நாம் வரவேற்போம்.